எனக்குள் ஒருத்தியை பற்றி குறித்துக் கூற ஒன்றுமில்லை,என் அறிவு எழுத்துக்கள் எங்கு எந்த வடிவில் இருந்தாலும் தெரிந்த மொழியாய் இருந்தால் வாசிக்க ஆசைப் படும் ஒன்று.என் கண்கள் சினிமா,குறும் திரைப்படம், மேடை நாடகம், எதுவாக இருந்தாலும் மொழி தாண்டி ,யதார்த்தத்தை ரசிக்க ஏங்குவன,என் கைகள் என்னுள் இருக்கும் உணர்வுகளை படைப்புகளாய் பகிர்ந்திட துடிப்பன,என் ஜீவிதம் இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ இழந்திருக்கப்பட வேண்டியது.என்னுள் உள்ளவற்றை உங்கள் ஒருத்தனிடமும், ஒருத்தியிடமும் பகிர்ந்து கொள்ளவே இத்தளம்.
Monday, September 20, 2010
விடா முயற்சி விஷ்வ ரூப வெற்றி................
"விடா முயற்சி விஷ்வ ரூப வெற்றி"...............
மன்னிக்கவும்,இது எனது சொந்த கருத்தன்று. அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாஸ் (எ) பாஸ்கரன் திரை படத்தில் தான் இந்த அற்புதமான கருத்தை அல்வா சாப்பிடுவதை போல இனிக்க ,புத்தியில் இடிக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். எடுத்துகாட்டு ஒன்றை எங்கிருந்தும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு. இதையெல்லாம் இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நானும் இப்படி தான் ஏராளமான உறுதிகளுடன் வலைபூ பதிவை ஆரம்பித்திருந்தேன். ஆனால் உப்பு விற்க போனால் மழைக் காலம் என்பது போல் எனக்கும் பரீட்சை, பரீட்சை காய்ச்சல், அதற்கு பிறகான அடுத்த கட்ட நகர்வு, அதற்கான வேலைகள் என போதாத காலம். இருப்பினும் காலம் பார்த்து உப்பு விற்பவனும், மழை காலத்திலும் உப்பை பணம் ஆக்குபவனுமே சிறந்த வணிகனாகுகிறான் . வலைபூ பதிவு அனுபவத்தை பொறுத்தளவில் இன்னும் தவழக் கூட ஆரம்பியாத நான் ,தலைக்கு மேல் வேலைகள்,தொழில் பிணக்குகள், மனப் பாரங்கள் என அனைத்தின் மத்தியிலும் சளராது தவறாது தம் பதிவுகளை பகிர்ந்துக் கொள்ளும் சிறந்த வலைபூ பதிவாளர்கள் அனைவரையும் பார்த்து,வியந்து, வாழ்த்தி நிற்கின்ற போது நானும் இவர்களுள் ஒருவராய் வரு நாள் வெகு தூரத்தில் இல்லை, தூரத்தில் தான் இருக்கிறது என்றிட ஆசைப் படுகிறேன்.
அதிகமான பேச்சு ஆக்கத்திற்கு நண்பனாகாதாம் , ஆதலால் ஏன் நீண்ட நாட்களாய் பதிவுகளிற்கு விடுப்பு என்பதற்கான காரணத்தை இதற்கு மேல் கூறுவதாயில்லை.
இறுதியாய் அடிக்கடி தொலைந்தாலும் , அடி மனதில் பதிந்துள்ள எண்ணப் பொதிகளில் உள்ளவற்றுள் ஒரு சிலவற்றை சுமந்து அடிக்கடி சந்திப்பேன் என்ற வாக்குகளுடன்,
இவள் எனக்குள் ஒருத்தி.......
Subscribe to:
Post Comments (Atom)
அருமையாக உள்ளது..நீண்டநாட்களின் பின்பு உங்கள் பதிவு
ReplyDeleteவழமை போல கருத்துக்களுடன்....
ReplyDeleteநன்றிகள்!
பதிவில் நன் குறிப்பிட்டிருந்த அந்த வலைபூ பகிரதர்களில்
நீங்களும் ஒருவள் என
நான் சொல்லி அறிய வேண்டியதில்லை
என்பதால்
வாழ்த்துகள் தொடரும் உங்கள் பதிவுகளிற்கு........
GIV YO FUL EFORT ....U WL ACHIV ND IM WISHIN U JANA...IM REALI PROUD OF YOU......!
ReplyDeleteU HV GUD IDEAZ,,,DN WASTE IT!!!
ABIJAHHHH........