
என் வாழ்வின்
சில
அரிதான நிமிடங்கள்
அவளின் அண்மையிலேயே.
அடிக்க
அணைக்க
அன்புக் கட்ட
அவளே அரிதாரம்.
இடை வரும் உறவுகளால்
நம் நிலை மாறலாம்
எந்நிலையிலும்
தன் நிலை மாறாதவள் அவள்.
தன்னுயிரால் என்னுயிர் தந்ததட்கன்று
தன்னினும் மேலான அக்கறை
தருவதாலேயே
அவள் நேர் நின்ற தெய்வம்.
அடித்ததற்காய்
திட்டியதற்காய்
அவள் அன்பிலும்
குறையிங்கு இல்லை.
எது வந்த போதும்
கலங்காது
கருணை சிந்த
தரணி வந்த தாரகையும் அவளே.
என்றும்
தேய்ந்து வளரும் நிலவாய்
வளர்ந்து பெருகும்
மக்கள் நம் அன்பு.
நன்றி செலுத்த
அவள் அன்பு
இங்கு
கடனிற்குரியதன்று.
ஈடு செய்ய
அவளோ
எனக்கு
எவளோ ஒருத்தி அல்ல.
என்னுள் இருப்பவள்
என்னை புரிந்தவள்
அறிவாள்
என் மனம்.
அதில் அன்னை அவள் அன்றி வேறு யாருண்டு என்றே!
என்றும்
அவளிற்காய் இவள்
எனக்குள் ஒருத்தி.
No comments:
Post a Comment